அமைச்சர் ஐ.பெரியசாமி பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் இலவச மருத்துவ முகாம்

 

திண்டுக்கல், டிச. 11: அமைச்சர் ஐ.பெரியசாமி பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் 30வது வார்டு திமுக சார்பில் நாகல்புதூர் காளியம்மன் கோவில் அருகே இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாம் துவக்க விழாவிற்கு, மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பழநி எம்எல்ஏ செந்தில்குமார் முகாமை துவக்கி வைத்து பேசினார்.

இதில் ரூ.5000 மதிப்புள்ள கல்லீரல் இழைநார் வளர்ச்சி பரிசோதனை, கால் பாத நரம்பு பரிசோதனை, சிறுநீரக செயல் திறன் கண்டறியும் பரிசோதனை, ரத்த அழுத்தம், ரத்தம் சர்க்கரை அளவு, 3 மாத சர்க்கரை சராசரி அளவு பரிசோதனை நடைபெற்றது. முகாமில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். நிகழ்ச்சியில், திமுக பகுதி கழக செயலாளர் ராஜேந்திர குமார், 30வது வார்டு கவுன்சிலர் லட்சுமி, வார்டு செயலாளர் சுப்புராஜ், முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார், ரஜினி குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாநகர மகளிர் அணி துணை அமைப்பாளர் உஷா தேவி செய்திருந்தார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை