அமைச்சரிடம் எம்எல்ஏக்கள் வாழ்த்து

ஓசூர், ஜூன் 7: நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கோபிநாத் 1 லட்சத்து 92 ஆயிரத்து 486 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரது வெற்றிக்காக பல வியூகங்களை அமைத்து கொடுத்த, மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியிடம் வெற்றிக்காக அயராது பாடுபட்ட, மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ ஆகியோர் சென்னையில் அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி கூறினர். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி தொகுதி பார்வையாளர் பார். இளங்கோவன், மாவட்ட துணை செயலாளர் முருகன், ஓசூர் மாநகர செயலாளர் மேயர் சத்யா, கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை