அமிர்தேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பாப்பிரெட்டிபட்டி, ஆக.18: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பையர்நத்தம் கிராமத்தில், மயிலைமலை பாலமுருகன் கோயில் உள்ளது. இந்த மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள அமிர்தேஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகை கோயிலில் ஆவணி மாத சனி பிரதோஷத்தையொட்டி பக்தர்கள் வழிபட்டனர். பிரதோஷத்தையொட்டி நந்தி பெருமானுக்கு, பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர், எலுமிச்சை, தயிர், அபிஷேக பொடி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜையில் பையர்நத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்