அமமுகவினர் அதிமுகவில் இணைந்தனர்: டி.கே.எம்.சின்னையாவுக்கு வாழ்த்து

சென்னை: தாம்பரம் தொகுதியில் அதிமுக சார்பில் டி.கே.எம்.சின்னையா போட்டியிடுகிறார். அவர் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மக்கள் பூக்கள் தூவியும், மாலைகள்  அணிவித்தும் அவரை உற்சாகமாக வரவேற்று வருகின்றனர். மேலும் அமைச்சராக இருந்து தொகுதிக்கு செய்த திட்டங்களை நினைவுப்படுத்தி ஒவ்வொரு பகுதியில் உள்ள மக்களும் உங்களுக்கு தான் எங்கள் வாக்கு என்று வாக்குறுதி அளித்து வருகின்றனர். பிரசாரத்தின் போது டி.கே.எம்.சின்னையா பேசுகையில், ‘தாம்பரத்தில் முதல்முறையாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டு பல்வேறு திட்டப்பணிகளை தாம்பரம் மக்களுக்கு செய்ததை மறக்கவே முடியாது. அதேபோல மீண்டும் இந்த தேர்தலில்  வெற்றி பெற்று தாம்பரம் தொகுதியில் மேலும் பல திட்டங்களை செய்தி தருவேன், என்று வாக்குறுதி அளித்தார். அமமுகவில் இருந்து முன்னாள் நகர மன்ற உறுப்பினரும், அமமுக நகர இணை செயலாளருமான தாம்பரம் மார்க்கெட் பாபு, 35வது வட்ட செயலாளர் பழக்கடை எஸ்.ஆறுமுகம் தலைமையில் ரவி, சுரேஷ், பாஸ்கர், அப்துல்லா, வினோத்,  சரண்ராஜ், கோபி, ராஜா, எஸ்.ஆர்.சுரேஷ், அம்ஜத் ராஜ், முஸ்தா உசேன், நடராஜ் உட்பட ஏராளமானோர் தாம்பரம் அதிமுக வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா முன்னிலையில் அதிமுகவில் இணைந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவர்கள் மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்திட பாடுபடுவோம் என நம்பிக்கை தெரிவித்தனர்….

Related posts

சொல்லிட்டாங்க…

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்