அபுதாபி, துபாய் விமானங்களில் 3.4 கிலோ தங்கம், ஐபோன் கடத்திய 4 பேர் சிக்கினர்

சென்னை: அபுதாபி, துபாய் நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 3.4 கிலோ தங்கம், ஐபோன்கள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர். துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் சென்னையை சேர்ந்த 4 பேரின் சூட்கேஸ்கள், பைகளில் செல்போன்கள், ஐபோன்கள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்கள், மின்னணு சாதனங்கள் இருந்தன.

அதன் மொத்த மதிப்பு ரூ25 லட்சம். மேலும் அவர்களின், உள்ளாடைகளுக்குள் சிறுசிறு பார்சல்களாக 10 பார்சல்களில் தங்கப் பசைகள் இருந்தன. 4 பேரிடம் இருந்தும் 3.4 கிலோ தங்கப்பசையை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ1.83 கோடி. இதையடுத்து சுங்க அதிகாரிகள் 4 கடத்தல் ஆசாமிகளையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தங்கம், ஐபோன், செல்போன்கள், வெளிநாட்டு சிகரெட்கள் என மொத்தம் ரூ2.08 கோடி மதிப்புடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை