பாபநாசம் : பாபநாசம் அருகே குழாய்களில் கலங்களான குடிநீர் வருவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.பாபநாசம் அருகே உத்தாணி ஊராட்சி, அவூர் சாலை அன்னுகுடி கிராமத்தில் ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று காலை வழங்கப்பட்ட குடிநீர் மஞ்சள் நிறமாகவும், காவி நிறமாகவும் கலங்களாக வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் குடிநீர் தேவைக்கு கிடைக்காமல் அவதிப்பட்டனர். சமையலுக்கும் பயன்படுத்த முடியாமல் சென்றது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு போர்க்கால அடிப்படையில் தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….
அன்னுகுடி கிராமத்தில் தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
previous post