அனைத்து பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே அரசின் நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கமாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. தலைமை செயலாளர் இறையன்பு வரவேற்று பேசினார். வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி பேரிடர் மேலாண்மை குறித்து விளக்கினார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பேரிடர் தாக்கத்தின்போது ஏற்படும் மனித உயிரிழப்புகள், பொது சொத்துக்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை வெகுவாக குறைத்து, தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கமாகும். அந்த நோக்கத்தை செயலாக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சமீப காலமாக ஏற்படும் இயற்கை பேரிடர்கள் இயற்கையாக மட்டும் ஏற்படுவதில்லை, மனிதர்களும் இதற்கு பொறுப்பேற்றாக வேண்டும். பருவகால சூழ்நிலை தற்போது சீராக இல்லை, இத்தகைய சூழலை புரிந்து நாம் நடந்துகொள்ள வேண்டும். பேரிடர் தடுப்பு பணிகள் என்பது பேரிடர் காலங்களில் மக்களை காப்பது மட்டுமல்ல, அத்தகைய பேரிடர் ஏற்படாத சூழலை நாம் உருவாக்கிட வேண்டும். சென்னை பெருநகரத்தை வெள்ளநீர் சூழாமல் தவிர்க்க, பெருநகர வெள்ளநீர் மேலாண்மை குழு அமைக்கப்படும். சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை பலப்படுத்திட ஒரு நிரந்தர திட்டத்தை உருவாக்கிட வேண்டும். அதேபோன்று, கடலூர் மாவட்டம் வெள்ளம் பாதிக்கும் மாவட்டமாக இருப்பதால், அதற்கும் நிரந்தர தீர்வு காணும் வகையில், பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே ஆராய்ந்து செயல்பட வேண்டும். ஒரு அரசாங்கத்தின் முதலாவது பணி மக்களை காப்பதுதான். அத்தகைய பணிக்கு நாம் அனைவரும் சேர்ந்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.* மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்இயற்கை பேரிடர் ஏற்படும் காலங்களில், அதிக அளவில் பாதிக்கப்படுபவர்கள் நகர்ப்புற ஏழை எளிய மக்கள், கிராம பகுதிகளின் விவசாயிகள்தான். அந்த பாதிப்புகளில் இருந்து அவர்களை காத்து, அவர்களின் இழப்புகளை ஈடுசெய்து மறுவாழ்வுக்கு வழிகோலுவதே அரசின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் பேரிடர்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தி, ஒரு மக்கள் இயக்கமாக பேரிடர் மேலாண்மையின் செயல்பாடுகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். அதேபோன்று, பேரிடர் மீட்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முன்வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி மனிதர்களுக்கு அரசு துறைகளின் மூலம் உரிய பயிற்சி அளிக்க வேண்டும்….

Related posts

உலக தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் தாம்பரம் ரயில் நிலைய வளாகம் ₹1000 ேகாடியில் மறுசீரமைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு

மெட்ரோ ரயில் பணி காரணமாக 2 நாட்கள் மடிப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு