அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி ஆய்வுக்கூட்டத்தில் வலியுறுத்தல்

மதுரை, அக்.28: மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி பகுதி மக்கள் சந்திப்பு இயக்கத்திற்கு சென்றபோது, உட்கடை கிராமங்கள் சிலவற்றில் பஸ் போக்குவரத்து முறையாக வருவதில்லை என மதுரை எம்பி சு. வெங்கடேசனிடம் மக்கள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், எம்பி சு.வெங்கடேசன், கலெக்டர் சங்கீதா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆறுமுகம், பொது மேலாளர் ராகவன் மற்றும் துணை மேலாளர் நடராஜன் ஆகியோர் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அனைத்து கிராமங்களுக்கும் முறையான பஸ் போக்குவரத்தை உறுதிசெய்ய இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி