விழுப்புரம், ஜூன் 25: விழுப்புரம் அருகே அனுமதியின்றி பேனர் வைத்ததாக அதிமுக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே கோலியனூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். அதிமுக அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளராக இருந்து வருகிறார். இதனிடையே தனது மகள் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு அனுமதியின்றி திருமண மண்டபத்துக்கு முன் 3 பேனர்களை வைத்துள்ளார். இதுகுறித்து வளவனூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.