அனுமதியின்றி எருதாட்டம் நடத்திய 5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, ஜூலை 9: கந்திகுப்பம் அருகே சின்னபனகமுட்லு பகுதியில், நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி சிலர் எருதுவிடும் விழா நடத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் எஸ்ஐ செல்வமாணிக்கம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து எருதுவிடும் விழாவுக்கு ஏற்பாடு செய்த அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன், அண்ணாமலை(53), பிரகாசம்(41), சுந்தரேசன், வெங்கடேசன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்