அத்தை மகளை திருமணம் செய்து வைக்க மறுப்பு பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகன் பெருமாள் (27). இவர் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2 வருடங்களாக தன்னுடைய அத்தை மகளை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இரு குடும்பத்தார் இடையே ஏற்பட்ட தகராறில் அத்தை பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்துள்ளார்.

இதனால், கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்த பெருமாள், நேற்று முன்தினம் காலை வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று காலை கோவிந்தவாடி அகரம் சின்ன ஏரி அருகில் பெருமாள் பூச்சி மருந்து குடித்து இறந்த நிலையில் கிடப்பதாக, பாலுசெட்டிசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெருமாளின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நெல்லை- சென்னை வந்தே பாரத்துக்கு திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் நாசரேத் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

உடன்குடியில் நாளை வருமுன் காப்போம் திட்ட முகாம்

வேப்பங்காடு பள்ளி ஆண்டுவிழா