அத்திவரதர் சுவாமி தரிசனம்

சேலம், ஜூலை 2: சேலம் பொன்னம்மாபேட்டை அம்பாயிரம்சாவடி தெருவில் உள்ள அத்திவரதர் மடத்தில், 3 நாட்களுக்கு அத்திவரதர் சுவாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்நாளான நேற்று காலை, அத்திவரதரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தினர். இதில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்றும், நாளையும் மாலை நேரத்தில் பாகவதர் குழுவினரின் பஜனை நடக்கவுள்ளது. காஞ்சிபுரத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஆதிஅத்திவரதர், 40 ஆண்டுக்கு பின் அனந்தசரஸ் திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மீண்டும் அத்திருக்குளத்திற்குள் அத்திவரதர் சென்ற நிலையில், சேலத்தில் நித்ய தரிசனம் தரும் வகையில் அத்திவரதர் சன்னதி அமைகிறது. அந்த சன்னதியில் அத்திவரதர் அருள்பாலிப்பார் என மடத்தின் நிர்வாகி சாந்தாராம் தெரிவித்தார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை