அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (53). திமுக 3வது வார்டு கிளைச் செயலாளர். அத்தாணி பேரூராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளரான அவர், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வாக்கு சேகரித்துவிட்டு வீட்டுக்கு வந்து, சாப்பிட்டுவிட்டு தூங்கினார். அதிகாலையில் ஐயப்பனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.ஐயப்பனுக்கு சாந்தி மணி (47) என்ற மனைவியும், அகிலேஷ் (25), ஹரிஹரன் (24) என்ற 2 மகன்களும் உள்ளனர்.இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு இப்பகுதி தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்….