Sunday, July 7, 2024
Home » அதிர்ச்சி தகவல்!: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் குழந்தை தொழிலாளர்களின் உழைப்பு 280% அதிகரிப்பு..!!

அதிர்ச்சி தகவல்!: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் குழந்தை தொழிலாளர்களின் உழைப்பு 280% அதிகரிப்பு..!!

by kannappan

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கால் குழந்தை தொழிலாளர்களின் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்திருப்பதாக குழந்தை உரிமைகள் கண்காணிப்பு அமைப்பகம் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. குழந்தை உழைப்பு அகற்றும் ஆண்டு என்பதே இந்த ஆண்டிற்கான கருபொருளாகும். இந்நிலையில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கொரோனாவிற்கு பிறகு குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 79 சதவீதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. 
கொரோனா ஊரடங்கில் பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் இடையிலான உறவு குறைந்ததே குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பதற்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது. இதனால் பள்ளிகளை சுயற்சி முறையில் செயல்படுத்துவது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும் என்று குழந்தை உரிமைகள் கண்காணிப்பு அமைப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் கிராமங்களில் குழந்தை பாதுகாப்பு அமைப்பை கொண்டு ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

You may also like

Leave a Comment

20 + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi