அதிராம்பட்டினம் குப்பை கிடங்கில் பற்றிய தீயால் வாகனம் கருகியது

அதிராம்பட்டினம் : அதிராம்பட்டினம் பேரூராட்சி குப்பைக்கிடங்கில் திடீரென தீப்பற்றியதில் அருகில் நிறுத்தியிருந்த பேரூராட்சி குப்பை அள்ளும் வாகனம் தீயில் கருகியது.தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் மதுக்கூர் சாலை வண்டிப்பேட்டை அருகிலுள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை திடீரென குப்பைக் கிடங்கில் தீ பற்றி எரியத் துவங்கியது. தீ மளமளவென பரவியதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை ஏற்றி வரும் வாகனமும் தீப்பிடித்து எரிந்தது.இதுபற்றி தகவல் அறிந்த பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தது. அதன்பேரில் பட்டுக்கோட்டையிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக அதிராம்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

Related posts

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

உதகை குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உயர் நீதிமன்றம் அருகே திமுக சட்டத்துறை ஆர்ப்பாட்டம்