சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நேற்று திடீரென சந்தித்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், பென்ஜமின் ஆகியோர் நேற்று மாலை சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திடீரென சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடம் நடந்தது. இந்த சந்திப்பு குறித்து சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறும்போது, ‘தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து மிரட்டப்படுகிறார்கள். இதுகுறித்து தமிழக கவர்னரிடம் புகார் மனு அளித்துள்ளோம்’ என்றார்….