Sunday, June 30, 2024
Home » அதிமுக பொதுக்குழு கூட்டம் எதிரொலி; சென்னையில் எடப்பாடி ஆதரவாளர்கள் தொண்டர்களுடன் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல்

அதிமுக பொதுக்குழு கூட்டம் எதிரொலி; சென்னையில் எடப்பாடி ஆதரவாளர்கள் தொண்டர்களுடன் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல்

by kannappan

சென்னை: சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் குவிந்ததால் கோயம்பேடு மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டருக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் காலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் கடுமையாக அவதிக்குள்ளாகினர். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை கோரிக்கை வலியுறுத்தி சென்னை வானகரத்தில் உள்ள வாரு பேலஸ் திருமணம் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. ஒற்றை தலைமை கோரிக்கை வலியுறுத்தி நடைபெறும் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் என்பதால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கான அதிமுகவினர் நேற்று இரவு முதல் அதிகாலை வரை சென்னையில் குவிந்தனர். பிறகு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் பகுதிக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தங்களது வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் குவிந்தனர். இதனால் இன்று அதிகாலை 6 மணி முதல் சென்னையில் பெரும்பாலான இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் வெளிமாவட்டங்களில் இருந்து சாலை மார்க்கமாக வந்த அதிமுகவினரால் திருச்சி தேசிய நெடுஞ்சாலை, அதேபோல் வேலூர் பகுதியில் இருந்து வந்த அதிமுகவினரால் மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி, பெரும்புதூர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், புதுச்சேரி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இருந்து வந்த வாகனங்களால் திருவான்மியூர், கிண்டி, போரூர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாரத்தின் முதல் நாள் என்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் சாலையிலேயே பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது. அதேநேரம், பொதுக்குழு நடைபெறும் பகுதிகளில் தான் அதிகளவில் கல்லூரிகள் அமைந்துள்ளது. இதனால் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடுமையாக அவதிப்பட்டனர். அதேபோல் போரூர் மற்றும் நந்தம்பாக்கத்தில் உள்ள பிரபல மருத்துவமனைகளுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வந்த நோயாளிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் மலர்கள் தூவியும், பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். இதனால் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் கோயம்பேடு, மதுரவாயல், வடபழனி, போரூர், கே.கே.நகர், அசோக்நகர், அமைந்தகரை, கிண்டி, பல்லாவரம், குரோம் பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், பூந்தமல்லி, வானகரம், எஸ்ஆர்எம்சி, மாங்காடு, திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. பொதுக்குழு நடைபெறும் வானகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார 3 கிலோ மீட்டருக்கு அதிமுகவினர் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு சென்றதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் பல கிலோ மீட்டருக்கு சாலையில் அணி வகுத்து நின்றது….

You may also like

Leave a Comment

nineteen − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi