சென்னை: பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்பது விதி. 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட கோரினால் 30 நாட்களுக்குள் கூட்ட வேண்டும். ஜூலை 11 பொதுக்குழு குறித்து ஜூன் 23 பொதுக்குழு கூட்டத்திலேயே அறிவிக்கப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்திருக்கிறது. …