Tuesday, September 17, 2024
Home » அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

by Ranjith

 

பாகூர், ஆக. 2: கடலூர் அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பத்மநாபன் கடந்த 28ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருப்பாதிரிப்புலியூர் பகுதியைச் சேர்ந்த அஜய் (எ) அன்பரசன், அன்பு, வித்தியாதரன், நேதாஜி ஆகிய 4 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த நிலையில் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலையில் ஈடுபட்ட மேலும் 3பேர் பிடிபட்டனர்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியைச் சேர்ந்த குரு (19) என்பவரையும், கொலை சம்பவத்திற்கு உளவு பார்த்த உள்ளேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த அஜய் (22), இந்த கொலைக்கு தூண்டுதலாக செயல்பட்ட திருப்பாதிரிப்புலியூர் பகுதியைச் சேர்ந்த தண்டாமுரளி (50) ஆகியோரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

4 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi