சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி முறையீடு செய்தார். வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி சதீஷ்குமார் அறிவித்துள்ளார்….