அதிமுக ஆர்ப்பாட்டம்

 

ராமநாதபுரம், ஜூன் 22: ராமநாதபுரத்தில் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் பஸ் டிப்போ முன்பு மாவட்ட அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

மண்டபம் மேற்கு ஒன்றியச் செயலாளர் மருதுபாண்டியன் வரவேற்றார். இதில் முன்னாள் அமைச்சர் எம்.மணிகண்டன், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் சுந்தரபாண்டியன், ஆணிமுத்து, மாணவரணி மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், மகளிரணி நிர்வாகி ஜெய்லாணி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். நகர் செயலாளர் பால்பாண்டி நன்றி கூறினார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை