Sunday, July 7, 2024
Home » அதிமுக ஆட்சி காலத்தில் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.7 கோடி முறைகேடு: வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 25 பேருக்கு நோட்டீஸ்

அதிமுக ஆட்சி காலத்தில் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.7 கோடி முறைகேடு: வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 25 பேருக்கு நோட்டீஸ்

by kannappan

புதுக்கோட்டை: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த ரூ.7 கோடி முறைகேடு தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 25 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2016 முதல் 2020 வரை 545 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 435 வீடுகள் கட்டாமலேயே வீடு கட்டியதாக போலியாக கணக்கு எழுதி ரூ.7 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, விசாரணை நடத்தி அவர்கள் மீது துறை ரீதியான 17 பி நடவடிக்கை எடுக்க ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குநருக்கு நேற்று உத்தரவிட்டார். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 25 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. …

You may also like

Leave a Comment

three + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi