Saturday, July 6, 2024
Home » அதிமுக அலுவலகம் சூறையாடல் வழக்கை தீவிரப்படுத்த கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் கூடுதல் மனு தாக்கல்

அதிமுக அலுவலகம் சூறையாடல் வழக்கை தீவிரப்படுத்த கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் கூடுதல் மனு தாக்கல்

by kannappan

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓ.பி.எஸ். ஆவணங்களை எடுத்து சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையில் புகார் அளித்தார். உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார் அப்போதுநான்கு வழக்குகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் சி.வி.சண்முகம் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அதிமுக அலுவலக கலவரம், சூறை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும் இதுவரை விசாரணையை தொடங்கவில்லை.  தமிழக காவல்துறை முறையான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்பதால்தான் தன்னிச்சையான விசாரணை குழு அமைக்க கோரிக்கை வைத்தோம். எனவே, சிபிசிஐடி முறையாக விசாரணை நடத்தும்படி தகுந்து உத்தரவுகளை பிறப்பிக்குமாறு  டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்….

You may also like

Leave a Comment

3 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi