அதிக மாத்திரைகள் சாப்பிட்டு மாணவன் தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருக்கு கவுதம் (18), பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் எப்போதும் செல்போனில் கேம் விளையாடி கொண்டு சரியாக படிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு கவுதம் தனது செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார். இதை பார்த்த அவரது தாய் பல லட்சம் செலவு செய்து படிக்க வைத்தால் இப்படி கேம் விளையாடி கொண்டு இருக்கிறாயே என்று கண்டித்து செல்போன்னை பிடிங்கி வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த கவுதம் அதிகளவில் வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் சிறிது நேரத்தில் கவுதம் மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை