அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

 

தேவகோட்டை,செப்.30:தேவகோட்டை வஉசி பேரவை சார்பில், வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 153வது பிறந்தநாள் விழா மற்றும் பேரவையின் 27ம் ஆண்டு விழா நடைபெற்றது. பேரவை தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜூ வரவேற்றார். பொருளாளர் ஜானகிராமன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். அமைப்பு செயலாளர் வெங்கடாசலம் ஆண்டறிக்கை வாசித்தார்.

அகில இந்திய வெள்ளாளர் பேரவையின் நிறுவனத் தலைவர் சிவதேசிகன், பேரவை புரவலர் லண்டன் முருகேசன்,விஏஓ சங்க நிறுவனர் போஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலூர் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. நலிவடைந்த 50 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டன.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி