அதிகளவு மாத்திரை சாப்பிட்ட பெண் சாவு

 

மண்டபம், மே 8: தேவிபட்டினம் அருகே அழகன்குளம் சத்யா நகரைச் சேர்ந்த முருகேசன் மனைவி முனியம்மாள்(57). இவர் உடல் நலத்திற்காக மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில், மே 5ம் தேதி இவரை மட்டும் வீட்டில் விட்டு விட்டு, அவரது மகன் உள்ளிட்டோர் கோயில் விஷேசத்திற்கு சென்று விட்டனர். சுவாமி கும்பிட்டு விட்டு மதியம் வீட்டிற்கு திரும்பிய போது முனியம்மாள் மயங்கி கிடந்தார். அவர் அருகே கிடந்த சர்க்கரை நோய் சிகிச்சைக்கான மாத்திரை அட்டையில் எண்ணிக்கை குறைந்திருந்தன. ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்ட முனியம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில், தேவிபட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி