டெல்லி: தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு பற்றி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி பணியை விரைவுப்படுத்துவது உள்ளிட்டவை பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை. ஆலோசனையில் புதுச்சேரி சார்பில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்து கொண்டுள்ளார்….