அண்ணா மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் மேயரிடம் மனு

கோவை, ஆக. 15: கோவை மேட்டுப்பாளையம் ரோடு அண்ணா காய்கறி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் மாடசாமி, செயலாளர் கனகராஜ், பொருளாளர் அப்துல்சமது மற்றும் நிர்வாகிகள், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோரிடம் நேற்று முன்தினம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் கடந்த 36 ஆண்டுகளாக அண்ணா மார்க்கெட்டில் வணிகம் செய்து வருகிறோம். இத்தொழிலை நம்பி, ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில், அண்ணா மார்க்கெட்டில் மாநகராட்சி சார்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 476 கடைகளும் புதுப்பிக்கப்படுகிறது. இப்பணி, நான்கு கட்டங்களாக நடக்கிறது. புனரமைப்பு செய்வதற்கு வசதியாக நாங்கள் கடைகளை காலி செய்து கொடுத்தோம். தற்போது ஒரு பகுதியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடைகள் பொது ஏலம் விடப்படும் என மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே அளித்த வாய்வழி உத்தரவுக்கு முரணானது. இந்த விவகாரத்தில், மாநகராட்சி நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். எனவே, இங்கு ஏற்கனவே கடைகள் உள்ளவர்களுக்கு, மீண்டும் கடைகள் ஒதுக்கி கொடுக்க வேண்டுகிறோம். பொதுஏலத்தை ரத்துசெய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்