காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, அனைத்து கட்சியினர் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, அரசு சார்பில் காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு கலெக்டர் ஆர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் உள்பட அரசு அதிகாரிகள் பலர் இருந்தனர். இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் திமுக சார்பில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில், சாலவாக்கத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், அண்ணா நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம் உள்பட திமுகவினர் பலர் மரியாதை செலுத்தினர்.இதில், மாவட்ட அவை தலைவர் சேகரன், துணை செயலாளர்கள் யுவராஜ், டாக்டர் சோபன்குமார், ராம்பிரசாத், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், பூபாலன், வி எஸ் ராமகிருஷ்ணன், துணை செயலாளர் ஜெகன்நாதன், எஸ்.கே.பி.சீனிவாசன், சாட்சி சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, திமுக அலுவலகமான கலைஞர் பவளவிழா மாளிகையில் உள்ள அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதிமுக சார்பில் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வளையாபதி தலைமையில், நகர செயலாளர் மகேஷ், ஏகாம்பரம், அருள், வெங்கடேசன், தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் ஏகாம்பரம், குமார், வனஜா உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்….