அண்ணா சிலைக்கு தீ வைப்பு பாமகவினர் மீது வழக்கு

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே மாதவச்சேரியில் உள்ள அண்ணா சிலைக்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தீவைத்தனர். இதையறிந்த அறிந்த திமுகவினர்  ஏராளமானோர் நேற்று காலை சிலை முன்பு திரண்டனர். சிலையை எரித்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கோஷமிட்டனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று திமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சிலையை கழுவி புதுவேட்டியால் மறைத்து கட்டி வைத்தனர். மாதவச்சேரி திமுக கிளை செயலாளர் செம்மலை, கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், ராமதாஸ் கூட்டத்துக்கு பாமக பிரமுகர் ராமச்சந்திரன் தலைமையில் சுமார் 20 பேர் சென்றனர். அதிகாலையில் அண்ணா சிலை எரிப்பு சம்பவம் நடந்துள்ளது. பாமகவினர் 20 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். …

Related posts

விக்கிரவாண்டியில் இன்றுடன் பரப்புரை ஓய்கிறது

ஐதராபாத்தில் குழந்தைகளுக்கு தாமரை சின்னம்; தேர்தல் பிரசார விதிமீறிய வழக்கில் அமித்ஷா, கிஷன் ரெட்டி பெயர்கள் நீக்கம்

நாட்டுக்காக சாக தேவையில்லை வளர்ச்சிக்கு பணியாற்றுங்கள்: குஜராத் விழாவில் அமித் ஷா பேச்சு