அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி: மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ‘நச்’ பேட்டி

திருப்பூர்: தமிழக அரசியலுக்கு அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசியலுக்கு அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி. நடைபெற இருக்கும் தேர்தல் சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான தேர்தல். அதிமுக ஆட்சியில் தேர்தல் நடத்தாமல் இருந்ததன் விளைவு மக்களுக்கான அதிகார பரவல் யாருக்கும் கிடைக்காமல் போய்விட்டது. திமுக ஆட்சி அமைந்துள்ள சூழலில் மாவட்ட ஊராட்சி தேர்தல் நடைபெற்றது. அடுத்த கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. பெண்கள், அடித்தட்டு மக்கள் ஆகியோரெல்லாம் மக்கள் பிரதிநிதிகளாக வர உள்ளார்கள். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வர உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…