கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகத்தாய். இவரது மகன்கள் செல்லத்துரை (26), முத்துசெல்வம் (19). இவர்கள் இருவரும் கொத்தனார் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு ஆளான செல்லத்துரை, அடிக்கடி மது அருந்தி விட்டு வந்தார். மேலும் மதுகுடிப்பதற்கு பணம் கேட்டு தாயிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.நேற்றிரவு 10 மணியளவில் வீட்டில் இருந்த செல்லத்துரை வழக்கம் போல் மதுகுடிக்க தாயிடம் பணம் கேட்டார். அவர், கொடுக்க மறுத்து விட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்லத்துரை தாயை தாக்கினார். அப்போது அங்கிருந்த முத்துசெல்வம், செல்லத்துரையை தடுத்து கம்பால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்து செல்லத்துரை இறந்தார். இது தொடர்பாக முத்துசெல்வத்தை போலீசார் கைது செய்தனர்….