அண்ணனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி: போலீஸ் விசாரணையில் சிக்கினார்

சென்னை: மயிலாப்பூர்,பி.என்.கே. கார்டன் 6 வது தெருவை சேர்ந்த கபாலி (38). இவர் தன்னுடைய அண்ணனுடன் சேர்ந்து வெல்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வரவில்லை. இதற்கிடையில் கடந்த 26ம் தேதி இறந்து விட்டதாக வீட்டின் அருகில் வசித்து வரும் சித்தி கபாலியின் சகோதரரிடம் தெரிவித்துள்ளார்.உடனடியாக வந்து பார்த்த போது அவருடைய காது, மூக்கு வழியாக ரத்தம் வெளியே வந்ததையடுத்து சந்தேகம் அடைந்த இறந்தவரின் சகோதரர் சுப்பிரமணி (40) மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இறந்தவரின் மனைவி மீது சந்தேகம் அடைந்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தன்னுடைய கணவர் தினமும் குடித்துவிட்டு சண்டை போடுவதாக தன்னுடைய அண்ணனிடம் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 25ம் தேதி அவருடைய சகோதரர் பல்லாவரத்தில் இருந்து மயிலாப்பூரில் உள்ள சகோதரி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தன்னுடைய சகோதரியின் கணவருக்கு மதுவாங்கி கொடுத்துள்ளனர். போதை அதிகமாகி சுயநினைவு இழந்தவுடன் சிலிண்டரை தலையில் போட்டு கொலை செய்து விட்டு அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டதாக கூறியுள்ளார். மேலும் இறந்தவரின் மனைவி வனிதாவும் வழக்கம் போல் வீட்டு வேலைக்கு சென்று விட்டு தன்னுடைய உறவினர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பல்லாவரத்தில் வசித்து வந்த சாந்தகுமார் (42) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். …

Related posts

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் குத்திக்கொலை

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது