தர்மபுரி, மே 14: தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே மாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராகுல்(27). டூவீலர் மெக்கானிக்கான இவர், நேற்று முன்தினம் உறவினர்கள் 4 பேருடன் வள்ளிமதுரை அணைக்கு சுற்றுலா சென்றார். அங்கு, எதிர்பாராதவிதமாக ராகுல் அணைக்குள் தவறி விழுந்தார். இதில், பலத்த காயமடைந்து, நீரில் மூழ்கிய அவரை உறவினர்கள் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ராகுல் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.