அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

மதுக்கரை, ஜூலை 23: கோவை – பொள்ளாச்சி நெடுஞ்சாலை ஈச்சனாரி அருகே கடந்த 15ம் தேதி சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. உயிருக்கு போராடிய அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதியவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மதுக்கரை போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த நபர் குறித்த அடையாளம் தெரிந்தால் மதுக்கரை காவல் ஆய்வாளரை அணுகலாம் என போலீசார் ஆங்காங்கே அறிவிப்பு நோட்டீஸ்களை ஒட்டி வருகின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு