Thursday, June 27, 2024
Home » அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

by Neethimaan

மதுக்கரை, ஜூலை 23: கோவை – பொள்ளாச்சி நெடுஞ்சாலை ஈச்சனாரி அருகே கடந்த 15ம் தேதி சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. உயிருக்கு போராடிய அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதியவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மதுக்கரை போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த நபர் குறித்த அடையாளம் தெரிந்தால் மதுக்கரை காவல் ஆய்வாளரை அணுகலாம் என போலீசார் ஆங்காங்கே அறிவிப்பு நோட்டீஸ்களை ஒட்டி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

seven + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi