அடையாளம் தெரியாத வாகனம் மோதி புரோட்டா மாஸ்டர் பலி

தேவதானப்பட்டி, ஏப். 17: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி புஷ்பராணி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (57). இவர் கெங்குவார்பட்டி கம்பெனி பிரிவில் தனியார் ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்தார். நேற்று வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக சென்றுள்ளார். அப்போது புஷ்பராணிநகர் பஸ் ஸ்டாப் அருகே செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி அமுதா தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்