ஜூன் 25: திருநெல்வேலி மாவட்டம் கீழ்கடையம் அருகே அருணாசலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குணவர்தன் (58). முதியவரான இவர் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரியில் இருந்து ஒரு தனியார் டிராவல்ஸ் பேருந்தில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் காந்தி நகர் என்ற இடத்தில் உள்ள டீ கடை அருகில் பயணிகள் டீ குடிப்பதற்காக ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்போது பேருந்தில் இருந்து இறங்கிய குணவர்தன் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக சென்ற அடையாள ம்தெரியாத வாகனம் மோதியதில் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருநாவலூர் காவல் நிலைய போலீசார், முதியவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.