அடையாறு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் : காவல் துறை அறிவிப்பு

சென்னை, செப். 14: சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: அடையாறு டெலிபோன் எக்சேஞ்ச் அருகே மெட்ரோ ரயில் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். அதன்படி, டாக்டர் முத்துலட்சுமி சாலையில் இருந்து திருவான்மியூர் நோக்கி வரும் வாகனங்கள் அடையாறு தொலைபேசி நிலையத்தில் தடை செய்யப்பட்டு, காமராஜ் அவென்யூ 2வது குறுக்கு தெரு (இடதுதிருப்பம்) சாஸ்திரிநகர் 1வது பிரதான சாலை (திருப்பத்தில்) மகாத்மா காந்தி சாலை (வலது திருப்பம்) லட்டிஸ் பாலம் சாலை (இடது திருப்பம்) வழியாக செல்ல அனுமதிக்கப்படுவர். இந்த பாதையானது ஒரு வழி போக்குவரத்தாக செயல்படும். திருவான்மியூர் சிக்னலில் இருந்து வரும் வாகனங்கள் மகாத்மா காந்தி சாலையில் வலதுபுறம் திரும்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவான்மியூரில் இருந்து அடையாறு மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்களுக்கு தடை இல்லை வழக்கம் போல் செயல்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்