அடுத்தடுத்து 3 வீடுகளில் செல்போன், பைக், லேப்டாப் திருட்டு: ஆசாமிக்கு வலை

பெரம்பூர்: பெரம்பூர் சீனிவாசன் தெருவை சேர்ந்த சிவில் இன்ஜினியர் விக்னேஷ் (34), நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டில் தூங்கியுள்ளார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த விலை மதிப்புள்ள 2 செல்போன்கள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதேபோல், எதிர் வீட்டில் வசிக்கும் ஆசிரியை ஸ்ரீலட்சுமியின் (37) வீட்டில் இருந்த லேப்டாப் மற்றும் விலை மதிப்புள்ள செல்போன் திருடு போனது தெரிந்தது. அருகில் உள்ள ராமகிருஷ்ணன் தெருவில் வசிக்கும் குமரன் (39), நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை வீட்டின் வெளியே நிறுத்தியுள்ளார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது அவரது பைக் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர், ஜன்னல் வழியாக செல்போன்கள், லேப்டாப் மற்றும் பைக்கை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்