அச்சுறுத்தும் புதியவகை கொரோனா…! இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 1.04 கோடியை தாண்டியது: 1.50 லட்சம் பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.04 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 18,222 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,04,31,639 ஆக உயர்ந்தது.* புதிதாக 228 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,50,798 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 19,253 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 1,00,56,651 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,24,190 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* குணமடைந்தோர் விகிதம் 96.39% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.45% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 2.16% ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் ஒரே நாளில் 9,16,951 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.* இதுவரை 18,02,53,315 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது….

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை