தர்மபுரி, டிச.9: தர்மபுரி மாவட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி தேங்காய்மரத்துப்பட்டியில் தர்மபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வளர்ச்சி நிதியிலிருந்து ₹13.57 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ கலந்து கொண்டு, புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில், ஒன்றியக்குழு உறுப்பினர் சோனியாகாந்தி வெங்கடேசன், பாமக ஒன்றிய தலைவர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் மனோகரன், சுப்ரமணி, வையாபுரி, ஜெயலட்சுமி, அன்பழகன், கூட்டுறவு சங்க தலைவர் அம்மாசி, கார்த்தி, பழனி, அருள், கண்ணதாசன், கிருஷ்ணன், பெரியசாமி, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு
previous post