அக்கச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்: மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு

கந்தர்வகோட்டை,ஏப்.12: அக்கச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் அக்கச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மேலாண்மை குழு தலைவி இலக்கியா தலைமையில் நடைபெற்றது. துணை தலைவி வேதநாயகி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன், மருத்துவர் சுவாமிநாதன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி, மருத்துவ வசதிகள், அரசு வழங்க கூடிய சலுகைகள், மாணவர்களின் ஆரோக்கியம் நலவாழ்வு குறித்தும், நம்ம ஊரு பள்ளி திட்டம்,

இடைநிற்றல் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்தும், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் நடைபெறும் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் குறித்தும், ஒருங்கிணைந்த கல்வி குறித்தும், போக்குவரத்து உயர்கல்வி சட்டம் குறித்து, இலக்கிய மன்றம், சிறார் மன்றம், வானவில் மன்றம் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது எனவும், முன் பருவ மழலையர் வகுப்புகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்துவது எனவும் கலந்தாலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சரண்யா, திவ்யா செல்வி, நிர்மலா, சத்யா, ரஞ்சிதா, மகேஸ்வரி, இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, ஆசிரியர்கள் மணிமேகலை, சிந்தியா, செல்வி ஜாய், இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை