கன்னியாகுமரி, ஜன. 14:அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள ஒன்றிய அலுவலக அவைக்கூடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவி சண்முகவடிவு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புஷ்பரதி, சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆரோக்கியசவுமியா, பால்தங்கம், ராஜேஷ், ஒன்றிய பொறியாளர் ரெஜின் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.