₹7.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

நாமக்கல், அக்.2: நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹7.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 322 மூட்டை பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள் விவசாயிகள் முன்னிலையில் ஏலம் நடத்தினர். இதில் ஆர்சிஎச் ரகம் ஒரு குவிண்டால் ₹8120க்கும், மட்டரகம் ₹4950க்கும் ஏலம் போனது. மொத்தம் ₹7.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை