₹2.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரம், ஜூன் 27: மல்லசமுத்திரம் கூட்டுறவு சங்கத்தில், 100 மூட்டை பருத்தி ₹2.50 லட்சத்துக்கு ஏலம் போனது. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 100 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்ட வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதல் பிடி ரகம் குவிண்டால் ₹6,890 முதல் ₹7,785 வரையிலும், கொட்டு ரகம் பருத்தி குவிண்டால் ₹3,180 முதல் ₹3,870 வரையிலும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக 100 மூட்டை பருத்தி ₹2.50 லட்சத்திற்கு ஏலம் போனது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை