ஸ்டவ்வில் தீப்பிடித்து பெண் கருகி சாவு

உடுமலை, ஏப். 30: உடுமலை அடுத்த போடிபட்டியைச் சேர்ந்த சதீஷ் மனைவி வெஜினா (37). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 24-ம் தேதி வீட்டில் சமைப்பதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்றவைத்தபோது அந்த ஸ்டவ் தடுமாறி கீழே விழுந்ததில் அவர் மீது தீப்பிடித்து, தீக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது சம்பந்தமாக உடுமலைப் பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

முசிறி டிஎஸ்பி பொறுப்பேற்பு

சமயபுரம் அருகே கோயில் பூசாரி வீட்டில் 2 ஆடுகள் திருட்டு

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்