வேலை தேடி கோவை வந்த வாலிபர் தற்கொலை

 

கோவை, ஜூலை 22: கோவைக்கு வேலை தேடி வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழைய கன்னிவாடியை சேர்ந்தவர் முருகன் மகன் சிவபிரகாஷ் (18). பள்ளிப்படிப்பை படித்து முடித்த இவர், வேலை தேடி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோவை வந்தார். பீளமேடு முல்லை நகர் ஹட்கோ காலனியில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு செல்ல முயற்சி செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் சாப்பிட்டுவிட்டு சிவபிரகாஷ் தனது அறைக்கு சென்றார்.

ஆனால், நீண்டநேரம் ஆகியும் அவரது கதவு திறக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பீளமேடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு காரணமா? என பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை