கெங்கவல்லி, ஜூலை 5: வீரகனூர் அருகே புளியங்குறிச்சியை சேர்ந்தவர் செல்வம் மகள் கிரிஜா(19). இவர் பிளஸ் 2 படித்து விட்டு, தலைவாசலில் உள்ள தனியார் கல்லூரியில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல வேலைக்கு சென்ற கிரிஜா, மாலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, அவரது பெற்றோர் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து கிரிஜாவின் தாய் சின்னபொண்ணு, வீரகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வீரகனூர் எஸ்ஐ கார்த்திக் வழக்கு பதிவு செய்து, மாயமான கிரிஜாவை தேடி வருகிறார்.