வேனில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

சாயல்குடி, ஜூலை 31: முதுகுளத்தூர் அருகே வேனில் கடத்தி வரப்பட்ட 7 மூட்டை ரேசன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் பறிமுதல் இருவரை கைது செய்தனர். கடலாடி, முதுகுளத்தூர் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்.ஐ சிவஞான பாண்டியன் மற்றும் முதுகுளத்தூர் டி.எஸ்.ஓ கதிவரன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு கடலாடி, முதுகுளத்தூர் சாலையிலுள்ள முனியன்கோயில் விலக்கு ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது கண்டிலான் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த ஒரு மினி வேனை சோதனை செய்ததில் மூட்டைகளில் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதில் 40 கிலோ எடையளவு கொண்ட 7 மூட்டைகள் இருந்தது. இதனை தொடர்ந்து மதுரையை சேர்ந்த டிரைவர் வேல்முருகன்(19), வேன் உரிமையாளர் சைவத்துரை(27)ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகளை அரசு நுகர்பொருள் வாணிப கிட்டங்கில் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை